நான் என்ன ஆஃப்கான்ல இருந்தா வந்தேன்?: கேட்கிறார் டிடிவி தினகரன்

நான் என்ன ஆஃப்கான்ல இருந்தா வந்தேன்?: கேட்கிறார் டிடிவி தினகரன்
நான் என்ன ஆஃப்கான்ல இருந்தா வந்தேன்?: கேட்கிறார் டிடிவி தினகரன்

நானும் இந்த மண்ணின் மைந்தன்தான். பாகிஸ்தானில் இருந்தோ, ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்துவிடவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ’ஆர்.கே.கநர் இடைத்தேர்தலில் நாளை மறுநாள் பரப்புரையை தொடங்க உள்ளேன். இரட்டை இலை சின்னம் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும். 95 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவில், எங்கள் தரப்புதான் வெற்றி பெறும்’ என்றார்.

‘நானும் இந்த மண்ணின் மைந்தன்தான். ஆஃப்கானிஸ்தானில் இருந்தோ, பாகிஸ்தானில் இருந்து வந்துவிடவில்லை எனவும் சென்னையை சேர்ந்தவன்தான் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ’மதுசூதனன் தான் இந்த மண்ணின் மைந்தன், நிச்சயம் வெற்றி பெறுவேன்’ எனக் கூறுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், இதைத் தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் சொன்னார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com