தினமும் குடி டார்ச்சர்: கை கால்களை கட்டி கணவனை கொன்ற மனைவி

தினமும் குடி டார்ச்சர்: கை கால்களை கட்டி கணவனை கொன்ற மனைவி
தினமும் குடி டார்ச்சர்: கை கால்களை கட்டி கணவனை கொன்ற மனைவி

குடி போதையில் தகராறு செய்த கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (44), விவசாயி. இவருக்கு தனலட்சுமி (34) என்ற மனைவியும், புவனேஸ்வரி (18) என்ற மகள், கணபதி(13), வசந்தகுமார் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி விட்டது. மகன்கள், பள்ளியில் படித்து வருகின்றனர்.

முருகேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவியை அடித்து உதைத்து தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல குடித்துவிட்டு முருகேசன் வீட்டுக்கு வந்தார். அவருக்கும், தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவி மற்றும் மகன்களை அடித்துள்ளார். இதையடுத்து கணவரை தீர்த்து கட்ட நினைத்த தனலட்சுமி, அவர் தூங்கும் வரை காத்திருந்தார். நள்ளிரவில், தூங்கி கொண்டு இருந்த கணவரின் கை, கால்களை கட்டினார். பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினார். இதில் முருகேசன் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அதிகாலையில் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி சரண் அடைந்தார். போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com