டிக்டாக் மூலம் காதல்: மனைவி, மகள் ஓட்டம் - அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!

டிக்டாக் மூலம் காதல்: மனைவி, மகள் ஓட்டம் - அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!
டிக்டாக் மூலம் காதல்: மனைவி, மகள் ஓட்டம் - அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!

மனைவி மற்றும் மகள் டிக்டாக் மூலம் அறிமுகமான நபர்களுடன் காதல் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் மாவட்டம், பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி(42) நான்கு சக்கிர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி கனகவள்ளி(37). மகள் நிவேதா (17). பதினொன்றாம் வகுப்பு மாணவி. மகன் குருபிரசாத் (15) பத்தாம் வகுப்பு மாணவர். தாய் கனகவள்ளி அழகு நிலையத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கனகவல்லி அழகு நிலைய பணிகளுக்கு இடையே டிக்டாக்கில் அதிக நேரம் செலவிட்டுள்ளார் . இந்நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவியான மகள் நிவேதா பள்ளி முடித்து வீட்டிற்க்கு வந்து நேரம் கிடைக்கும்போதும், தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் செயல்படததாலும் தாய் கனகவல்லி பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சென்று தாய்க்கு உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில், டிக்டாக் மூலம் ஏற்பட்ட தொடர்பில் ஒரு நபருடன் நிவதாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை வளர்த்துள்ளனர். இதேபோன்று நி்வேதாவின் தாயார் கனகவள்ளிக்கும் டிக்டாக் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது.

தாய் கனகவள்ளியும், மகள் நிவேதாவும் காதல் வயப்பட்டு மணிகணக்கில் போன் பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால்,அழகு நிலையத்திற்கு வரும் தொடர் வாடிக்கையாளர் உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததையடுத்து கனகவல்லியை உரிமையாளர் கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் டிக்டாக்-ல் இருவரும் முழ்கி கிடைத்துள்ளனர். இதனை ரவி கண்டித்துள்ளார். இதனால் கனகவள்ளியும், நிவதாவும் வீட்டை விட்டு மாயமாகினர். இதனை தொடர்ந்து ரவி, திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் போலீசாரிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாய், மகள் இருவரையும் கண்டுபிடித்து ஒழுக்கமாக குடும்பத்துடன் வாழுமாறு அறிவுரை கூறி ரவியிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் காதலனை காண முடியாத ஏக்கத்தால் தாய், மகள் இருவரும் மீண்டும் மாயமாகினர். மாயமாகிய இருவரும் ஈரோட்டில் இருப்பதாக ரவிக்கு தகவல் கிடைக்க அவர் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்று கனகவள்ளியை திரும்ப தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளார். கனகவள்ளி,தன கணவன் ரவியை தகாத வார்ததைகளால் பேசி அவமானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய ரவி, செல்போனில் தனது மனைவி, மகளின் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மனைவி, மகளை மீட்டு பத்திரபடுத்துமாறும் செல்போனில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்,ரவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீடியோவை ஆதாரமாக கொண்டு சம்பந்தபட்டவர்கள் மீது அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com