‘ககன்யான்’ திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது - இஸ்ரோ தலைவர் சிவன்

‘ககன்யான்’ திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது - இஸ்ரோ தலைவர் சிவன்
‘ககன்யான்’ திட்டத்திற்காக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது - இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்காக வீரர்கள் தேர்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கிடையே தற்போது விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி செல்கிறேன். சந்திராயன்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பேலோட்ஸ் எல்லாம் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. அடுத்ததாக வருகிற நவம்பரில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவும் திட்டம் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘ககன்யான்’ திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது. ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வுகள் தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்படும் வீரர்கள் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்திசெய்யப்பட்டு பரிசோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் உள்பட புது, புது ராக்கெட் என்ஜின்களை வடிவமைக்கும் திட்டம் உள்ளது. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வரவுள்ளோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com