கொல்லம் டூ சென்னை ரயில் பெட்டியில் இருந்த பெரிய விரிசல்... ஊழியர்கள் சாதுர்யத்தால் சேதம் தவிர்ப்பு!

கொல்லம் - சென்னை அதிவிரைவு ரயிலில் பெட்டியில் இருந்த மிகப்பெரிய கிராக், உரிய நேரத்தில் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Kollam express
Kollam expresspt desk

கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு செல்லும் கொல்லம் - சென்னை விரைவு ரயில் நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது வழக்கம்போல் செங்கோட்டை ரயில்வே ஊழியர்கள் ரயிலை சோதனை செய்துள்ளனர்.

train coach
train coachpt desk

அப்பொழுது, ரயிலில் உள்ள எஸ்-3 பெட்டியில் மிகப்பெரிய அளவிலான கிராக் ஒன்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், விரைந்து வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் அந்த பெட்டியை அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து எஸ் - 3 பெட்டியில் இருந்த பயணிகள் எஸ் - 2 பெட்டியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சுமார் ஒருமணி நேர தாமதத்திற்குப் பிறகு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் - சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் பெட்டியின் அடியில் மிகப்பெரிய கிராக் இருப்பதை சோதனையின் போது ஊழியர்கள் கண்டுபிடித்தால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com