ஒசூர்: இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம் செய்த மூன்று இளைஞர்கள் உயரிழப்பு

ஒசூர்: இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம் செய்த மூன்று இளைஞர்கள் உயரிழப்பு
ஒசூர்: இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம் செய்த மூன்று இளைஞர்கள் உயரிழப்பு

ஒசூர் அடுத்த பாகலூரில் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள பாகலூர் மக்கான்பேட்டையைச் சேர்ந்தவர் அபித் (21). இவர் தனது நண்பர்களான பாகலூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த சையப் (20) மற்றும் தர்மபுரி மாவட்டம் அதகாப்பாடியைச் சேர்ந்த பூவரசன் (19) ஆகியோருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒசூர் - பாகலூர் சாலையில் வந்த மூவரும் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மாலூர் சாலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாகலூர் போலீசார் சலடங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com