ஓசூர்: வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்

ஓசூர்: வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்
ஓசூர்: வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக வனப்பகுதியான தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் சானமாவு போன்ற வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித் திரிந்தது. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா என்ற இடத்தில் சாலையை கடந்து சென்றது. அப்போது வனத்துறையினர் அந்த சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதையடுத்து காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து சென்ற பின்னர் வனத்துறையினர போக்குவரத்தை சரி செய்தனர். இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் தின்னூர், முள்பிளாட், தவரக்கரை, அகலக்கோட்டை ஜவளகிரி ஆகிய வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com