மத நல்லிணக்க விருந்து ! அன்பை பரிமாறிக்கொண்ட இந்து-இஸ்லாமியர்கள்

மத நல்லிணக்க விருந்து ! அன்பை பரிமாறிக்கொண்ட இந்து-இஸ்லாமியர்கள்
மத நல்லிணக்க விருந்து ! அன்பை பரிமாறிக்கொண்ட இந்து-இஸ்லாமியர்கள்

ஓசூரில் காவல்துறை சார்பில் நடந்த மத நல்லிகணக்க ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் பகுதியில், விநாயகர்சதுர்த்தி மற்றும் மொஹரம் பண்டிகை என இரண்டிற்கும் சேர்த்து மத நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கெலமங்கலம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த விருந்தில், ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு காவல் உதவியாளர் செல்வராகவன் தலைமையில் காவல்துறையினரே உணவு பரிமாறினர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக துணைக்காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் கெலமங்கலம் ஆய்வாளர் பங்கேற்றனர். இந்த மத நல்லிணக்க விருந்தின் மூலம் உணவு மட்டுமின்றி, அன்பையும் பரிமாரிக்கொண்டதாக இரு மதத்தினரும் தெரிவித்தனர். அத்துடன் காவலர்களும், பொதுமக்களும் நட்புணர்வாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை அப்பகுதியினர் பெரிதும் வரவேற்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com