ஓசூர்: சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரியின் பின்னால் கார் மோதிய விபத்து – 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ஒசூர் அருகே, சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரியின் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
car accident
car accidentfreepik

கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியில் பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்து
சாலை விபத்து
car accident
அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை - கடிதத்தில் இருந்த காரணம் - காவல்துறையினர் விசாரணை!

காரில் பயணித்தவர்கள் திருப்பூர் அடுத்த வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சூளகிரி போலீசார் தெரிவித்தனர். முன்னால் சென்ற சரக்கு லாரியின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com