3 மாதமாக உணவு வழங்காத விடுதி‌ நிர்வாகம்: மாணவர்கள் வேதனை

3 மாதமாக உணவு வழங்காத விடுதி‌ நிர்வாகம்: மாணவர்கள் வேதனை

3 மாதமாக உணவு வழங்காத விடுதி‌ நிர்வாகம்: மாணவர்கள் வேதனை
Published on

திருச்சி அரசு தொழில் பயிற்சி பள்ளி மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி பள்ளி விடுதியில் 75 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என புகார் கூறப்படுகிறது. 
அரசு விடுதியில் கட்டணம் வசூலித்துவிட்டு உணவு செலவுக்கு, அரசு நிதி ஒதுக்கவில்லை என மாணவர்கள் அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். மேலும் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளை சேர்ந்த மாணவர்‌களே இங்கு தங்கி படிப்பவர்கள் என்பதால் தினமும் ஹோட்டலில் சாப்பிட பண வசதியில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள்‌ மனு அளித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com