காவலர்களுக்கு வாரவிடுமுறை அறிவிப்பு: சீமான் பாராட்டு

காவலர்களுக்கு வாரவிடுமுறை அறிவிப்பு: சீமான் பாராட்டு
காவலர்களுக்கு வாரவிடுமுறை அறிவிப்பு: சீமான் பாராட்டு

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வளிக்க வேண்டுமென  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்திருப்பதை பெரிதும் வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சைலேந்திர பாபு ஆகியோருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com