\
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு
Published on

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் ரத்தத்தை முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளார். தனது இந்த நிலைமைக்கு காரணமாக சாத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com