கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கைது

கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கைது
கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கைது

கொலை மிரட்டல் புகார் அடிப்படையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமாரை, சென்னை அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சூளைமேட்டை சேர்ந்தவர் பீமல் ராஜ். இவர் ராம ரவிக்குமார் தன்னிடம் வாடகைக்கு கார் எடுத்திருந்தார் எனவும், அதற்கான வாடகை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராம ரவிக்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் ராம ரவிக்குமார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கைது செய்யப்பட்டதாகவும், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com