ஹிஜாப் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஹிஜாப் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு
ஹிஜாப் விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி மற்றும் 50 இஸ்லாமிய பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

எனவே, இதனைக் கண்டித்து தோப்புத்துறை பள்ளிவாசல் எதிரே மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நேற்று கொட்டும் மழையில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com