'அமித்ஷா அளித்த அறிக்கையில் கூட இந்திக்கு தான் முதலிடம்' - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

'அமித்ஷா அளித்த அறிக்கையில் கூட இந்திக்கு தான் முதலிடம்' - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
'அமித்ஷா அளித்த அறிக்கையில் கூட இந்திக்கு தான் முதலிடம்' - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

“ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்ய பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாடியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 மொழிப்போர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு பல்வேறு தரப்பினர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவர். அந்த வகையில் திமுக சார்பில் சென்னை அருகே அம்பத்தூரில் நேற்று மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''1938இல் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. மொழிக்காக உயிர் கொடுத்த தியாகிகளுக்கு ஜனவரி 25ஆம் தேதி அவர்களை நினைவு கூறும் வகையில் என்பதை நினைவூட்டுகிற நாள் இந்த வீரவணக்க நாள். அதே போல தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவில் வரலாற்றிலே சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் நம் முதல்வர். தற்பொழுது தமிழ்நாட்டில் தமிழை ஒழிக்கவும் இந்தி மொழியை திணிக்கவும் பாஜக முயற்சி செய்கிறது. எந்த மொழியையும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் போராடி வருகிறார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழை வளர்த்தனர். இவர்கள் வழியில் தமிழுக்காக முதல்வர் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் பொன்முடி, ''ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. அது புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் நிதி ஒதுக்குவதாக இருந்தாலும் இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த அறிக்கையில் கூட இந்திக்கு தான் முதலிடம் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் தடுத்து நிறுத்தி அந்தந்த மாநில மொழிகள் வளர வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழுக்காக மட்டுமல்ல அந்தந்த மாநில மொழிகளுக்காக குரல் கொடுத்து முதலமைச்சராக திகழ்கிறார்'' எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com