குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.