பிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

பிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
பிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிரஞ்சீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நெகிழி பொருளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறை படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு மட்டுமே நெகிழிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

ஆனால், நாளடைவில் சட்டத்திற்கு புறம்பாக நெகிழியை பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது . இதனால்,  விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை பொருட்கள் நலிவடைய தொடங்குகின்றன.

இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலை உள்ளது. அதோடு நெகிழி பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசடைவது அதிகரிக்கும். எனவே, நெகிழி பயன்பாட்டிற்கு  தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு, இது குறித்து தமிழக உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com