சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம் - உயர் நீதிமன்றக் கிளை

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம் - உயர் நீதிமன்றக் கிளை
சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம் - உயர் நீதிமன்றக் கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு 5 மாதங்கள் அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக தடவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என சிபிஐ தெரிவித்திருக்கிறது. மேலும் செல்போன் உள்ளிட்ட உபகரணங்களில் அழிக்கப்பட்ட விவரங்கள் கிடைத்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.

வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை 20 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுவதாகவும் கீழமை நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்திருக்கிறது. எனவே உத்தரவு நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com