கனமழை: செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கனமழை: செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கனமழை: செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வினாடிக்கு 5240 கனஅடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், தற்போது 2722 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 5வது நாளாக 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 6737 கனஅடி நீர்வரத்து இருப்பதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1200 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com