மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழுவிவரம் உள்ளே!

மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழுவிவரம் உள்ளே!
மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முழுவிவரம் உள்ளே!

மதுரை உள்ளிட்ட மேலும் 5 மாவட்டங்களில் நாளை  (10 -11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 11 ஆம் தேதி காலை வட தமிழகம் அருகே வரும் என்றும் இதனால், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை அல்லது நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரை உள்ளிட்ட மேலும் 5 மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை நாளை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை(10.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (10-11-2021) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.விசாகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதே போல் புதன்கிழமை அன்று சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை தொடர்வதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com