விடிய விடிய விடாமல் பெய்த கனமழை: புழல், பூண்டி ஏரிகளில் அதிக நீர் வெளியேற்றம்

விடிய விடிய விடாமல் பெய்த கனமழை: புழல், பூண்டி ஏரிகளில் அதிக நீர் வெளியேற்றம்
விடிய விடிய விடாமல் பெய்த கனமழை: புழல், பூண்டி ஏரிகளில் அதிக நீர் வெளியேற்றம்

நீர்வரத்து அதிகரிப்பால் புழல், பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரித்து உள்ளது.

புழல் ஏரிக்கு விநாடிக்கு 10000 கனஅடி நீர்வரத்து உள்ளதால், காலை 7 மணியளவில் 2000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக உபரி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் பூண்டி ஏரிக்கு 8000 கன அடி நீர்வரத்து இருப்பதால் 5000 கன அடியில் இருந்து 6000 கன அடியாக நீர் திறப்பை அதிகரிக்க உள்ளனர்.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை 850 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஏரிக்கு விநாடிக்கு 5240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com