
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 4,5 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4,5 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.