மூன்றாவது நாளாக இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை

மூன்றாவது நாளாக இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை
மூன்றாவது நாளாக இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது. குறிப்பாக அடையாறு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக சென்னையில் ஜூன் மாதம் கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில், 2 முறை மட்டும் ஜூன் மாதங்களில் கனமழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com