தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

6 மாவட்டங்களில் கனமழை இன்று பெய்யும் என நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், இன்று 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, தேனி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல் நாளையும் தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் வாட்டிவதைத்து வரும் நிலையில் வெயிலை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது மழைபொழிந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com