கனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு

கனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு
கனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையொட்டி மாவட்டத்தோறும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் மழையை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கனமழையால் வெள்ளம் வந்தால் மீட்புப்பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோறும் 21 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com