கனமழை
கனமழைweb

கள்ளக்குறிச்சி to மயிலாடுதுறை.. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை
கனமழைpt web

அதேபோல்,ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகையில் நாளை கனமழை பெய்யும்என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 9-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழைக்குவாய்ப்புள்ளது. சென்னை மாநகரைபொறுத்தவரை இன்று இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com