கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்புpt desk

கோடையில் குளு குளு.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும் நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது. கோடை மழை இயல்பை விட 90 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.

தென்மேற்கு பருவமழை தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, குமரி கடல், தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பரவியுள்ளது. அடுத்த மூன்று தினங்களில் மாலத்தீவு, குமரி கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு அரபிக்கடல், ,வங்கக் கடல் பகுதிகளிலும் மேலும் சில பகுதிகளுக்கும் பரவக்கூடும். வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
தேர்தல் வரைக்கும் பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா? - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்!

இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரியில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இந்த இரண்டு நாட்கள் வெப்பம் படிப்படியாக குறையும் ,அதற்குப் பிறகு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். இரண்டு நாட்கள் வெப்பநிலை குறைவாக இருக்கும். அதற்குப் பிறகாக இரண்டில் இருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக் கூடும்...

கனமழைக்கு வாய்ப்பு
நேர்மை..! குப்பையில் கிடந்த தங்கச் செயின்.. காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னர் வளைகுடா அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிக்கு செல்லக்கூடாது. கோடை மழை மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை 192.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு நிலை மழை 101.4 மிமீ அளவானது. இது சராசரியை விட 90 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 27ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு ஒரு சில நாள் கழித்து தமிழக பகுதியில் அது பரவக்கூடும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com