தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பொழிந்து வருகிறது. அதுவும் தலைநகர் சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையினால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதனால் சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. அதோடு நகரை சுற்றி அமைந்துள்ள நீர் நிலைகள் நிறைந்து வருகின்றன.
இந்நிலையில் மாநிலத்தின் மழை நிலவரம் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் பிரதமர் மோடி.
“தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பேசியதன் மூலம் தெரிந்துக் கொண்டேன். மேலும் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான மத்திய அரசின் உதவியை அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளேன். அனைவரின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி.