கொட்டித்தீர்த்த கனமழை; குளம் போல் மாறிய சாலைகள்!

சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்புறத்தில் கனமழையால் சாலைகள் குளம் போல காட்சியளித்தன.

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ததால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னையில் பல்லாவரம், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுக்கவே கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை தாம்பரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததால், 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் மூன்று மோட்டார்கள் வைத்து நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும், அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சீராகிவிட்டது என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com