சென்னையில் மழை தொடருமா ? - வெதர்மேன் பிரத்யேக பேட்டி

சென்னையில் மழை தொடருமா ? - வெதர்மேன் பிரத்யேக பேட்டி

சென்னையில் மழை தொடருமா ? - வெதர்மேன் பிரத்யேக பேட்டி
Published on

சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தொடருமா ? என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டியளித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு பேட்டியளித்த வெதர்மேன் பிரதீப் ஜான், “சென்னையில் தற்போது பெய்து வரும் மழை அடுத்த 5 அல்லது 6 நாட்கள் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 26ஆம் தேதி வரையில் இதுபோன்ற மழையை சென்னைப் பகுதியில் எதிர்பார்க்கலாம். 

கடந்த 200 நாட்களாக சரியான மழையின்றி காணப்பட்டது. எனவே முதல் இரண்டு நாள் மழை பெய்தாலே நிலத்தடி நீர் நிரம்பும் எனக் கூறமுடியாது. பெய்த இடத்திலேயே தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. மக்கள் மழையை வெளியே வந்து ரசிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் மழையை உற்சாகத்துடன் சத்தமிட்டு வரவேற்கின்றனர். 

தென் சென்னையின் ஒருபகுதியில் மழை பெய்யும் போது, வட சென்னை பகுதியில் மழையில்லை. வெப்பச்சலனம் என்றால் இப்படி தான் மழை பெய்யும். ஆனால் இந்த மழையால் ஏரிகள் நிரம்பி தண்ணீர் ஓட வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவமழையில் அப்படி பெரும் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையில் இப்படி ஒரு மழையை சென்னையில் எதிர்பார்ப்பது மிகவும் அரிதானது” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com