தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் மேற்கு திசை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பின்னர் ஒன்றாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தாலுகா அலுவலகம், பந்தலூர், பார்வூட் பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், சின்னக்கல்லார், தேவாலாவில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடலூர் பஜார், அவலாஞ்சி, மேல் கூடலூர் பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம், சோலையார், மேல்பவானியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com