கனமழை: அலுவலகத்தில் தங்கிய ஐடி ஊழியர்கள்

கனமழை: அலுவலகத்தில் தங்கிய ஐடி ஊழியர்கள்
கனமழை: அலுவலகத்தில் தங்கிய ஐடி ஊழியர்கள்

சென்னையில் இரவு இடி மின்னலுடன் பெய்த பலத்த மழைக் காரணமாக, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் அலுவலகத்திலேயே நேற்றிரவு தங்கினர்.

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் பல இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. குறிப்பாக, அடையாறு, எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள மயமாக காட்சியளிக்கின்றன. மழை காரணமாக ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப் பாதை மூடப்பட்டது. அசோக் நகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமைந்துள்ள ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை வெள்ளத்தில் மிதக்கின்றது. இதனால் பிற்பகல் பணிக்கு வந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அலுவலகத்திலேயே தங்கும் நிலைக்கு ஆளாகினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com