தொடர்மழை எதிரொலி: சென்னையில் மெட்ரோ பணிகள் நிறுத்தம்

தொடர்மழை எதிரொலி: சென்னையில் மெட்ரோ பணிகள் நிறுத்தம்

தொடர்மழை எதிரொலி: சென்னையில் மெட்ரோ பணிகள் நிறுத்தம்
Published on

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகளில் நடைபெற்று வந்த மெட்ரோ சுரங்கபாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து 4 நாட்கள் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்ட்ரல்- சைதாப்பேட்டை இடையேயான மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் 19 கி.மீ தொலைவில் நடைபெற்று வந்த சுரங்கபாதை பணிகள் கடந்த 3 நாட்களாக தடைப்பட்டு உள்ளது. மேலும் சுரங்கபாதையில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தற்போது துவங்கியுள்ளது. அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மெட்ரோ சுரங்கபாதையில் மழைநீர் புகாதபடி, மணல் மூட்டைகளை வைத்து ஊழியர்கள் தடுப்பு சுவரை எழுப்பி வருகின்றனர்.   
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com