கடலூரில் நடந்த உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

கடலூரில் நடந்த உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு
கடலூரில் நடந்த உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரில் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ராஜா என்பவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருந்தார். ஆனால் நோயாளி ராஜா முகக்கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு காலை உணவு சாப்பிட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com