45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்

45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்

45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படும் : சுகாதாரத்துறை அமைச்சகம்
Published on

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும் என்றும், கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தத்தை விரைவு படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டு டிசம்பர் 6ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று அதே அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது.அதில்,"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு மத்திய நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. நிதிக்குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய கேபினட் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். தொடர்ந்து, கேபினட் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையான பயன்பாட்டிற்கு வரும்" என கூறப்பட்டிருந்தது. இதனையேற்ற நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com