மணல் குவாரிகளுக்கு தடை தொடரும்: உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டம்

மணல் குவாரிகளுக்கு தடை தொடரும்: உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டம்
மணல் குவாரிகளுக்கு தடை தொடரும்: உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டம்

6 மாதங்களில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும், புதிதாக மணல் குவாரிகளை திறக்க கூடாது, கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி மகாதேவன் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் எனவும் தெரிவித்தார். நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து 3 மாவட்ட ஆட்சியர்களின் மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் மணல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com