ஹெல்மெட் அணியாதவர்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் அணியாதவர்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் அணியாதவர்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம்
Published on

ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்குசக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிகளை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி கே.கே.ராஜேந்தி ரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லி, பெங்களூரில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தும் போது தமிழகத்தில் மட்டும் அமல்படுத்த முடியாதது ஏன் என்றும் வினவினர். இதற்கு ஹெல்மெட் அணியாதது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு பதில் அளித்தது. 

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது, அதனை அதிகரிப்பதற்கான சட்டத்திருத் தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு தெரிவித்தது. அப்போது ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நீதிபதிகள் வினவினர். அதற்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என அரசு கூறியது.

 அப்போது ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு, ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com