\
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகையாக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையி, “தனியார் வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும், புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை போல உதவித்தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரியலூர், காஞ்சிபுரம், திருச்சி, சேலம், மேட்டூர், பழனி, ஆரணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com