நடிகர் சூர்யாவை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா

நடிகர் சூர்யாவை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா

நடிகர் சூர்யாவை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா
Published on

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

திமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது, மக்கள் இந்தி படிக்க கூடாதா? என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com