ஹோட்டலில் சாப்பிடும் பேச்சுலர்கள் பாடு திண்டாட்டம்: ஜி.எஸ்.டி. எதிரொலி!
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக உணவகங்களில் 5% முதல் 18% வரை விலை உயர்ந்துள்ளதால் வேலைக்காக சொந்த ஊரைவிட்டு வந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் உணவகங்களில் புதுவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய ரக உணவகங்களில் 5 சதவீதம் விலை கூடியுள்ளது. குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர்சாதன வசதியுள்ள உணவகங்களில் 18 சதவீத விலையும் உயர்ந்துள்ளது. உணவகங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ள விலையால் பெரிதும் பாதுக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். வேலைநிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வசித்து வரும் பல இளைஞர்கள் உணவகங்களையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் உணவகங்களில் விலை உயர்வு தங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.