குரூப் 4 முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்

குரூப் 4 முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்
குரூப் 4 முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்

குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 39 தேர்வர்கள் வந்துள்ளதாவும், இவர்களுக்கு பதில் வேறு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், 52 பேர் விடைத்தாளில் திருத்தம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com