3 ஆண்டுக்கு பிறகு கொண்டாடப்பட்ட மயான கொள்ளை திருவிழா! லட்ச கணக்கில் குவிந்த பக்தர்கள்!

3 ஆண்டுக்கு பிறகு கொண்டாடப்பட்ட மயான கொள்ளை திருவிழா! லட்ச கணக்கில் குவிந்த பக்தர்கள்!
3 ஆண்டுக்கு பிறகு கொண்டாடப்பட்ட மயான கொள்ளை திருவிழா! லட்ச கணக்கில் குவிந்த பக்தர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில், 3 மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை குவிந்தனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா, கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதனைத் தொடர்ந்து மயான கொள்ளை தேர் திருவிழா ஊர்வலம் துவங்கியது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கினர். இதில் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள், அம்மன் வேடமிட்டு மேல தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பலர் அலகு குத்தியும், அந்திரத்தில் தொங்கியபடியும் ஊர்வலமாக சென்றனர். இந்த மயான கொள்ளை திருவிழா கொரோனா தொற்றால் கடந்த மூன்று ஆண்டுகள் நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் போன்ற இடங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

மயான கொள்ளை தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு அந்தரத்தில் தொங்கியவாறு சென்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அம்மன் ஊர்வலம் வந்தபோது, அந்தரத்தில் ராட்டினத்தில் அலகு குத்திக்கொண்டு தொங்கியவாறு பக்தர்கள் 100 அடி தூரம் சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல், தீபாராதனை செய்தல், மற்றும் கை குழந்தையை ஏந்தி சென்று மாலை அணிவித்தல், போன்றவை செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த வினோத நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து ஆசி பெற்றனர்.

இதை தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மயானத்திற்க்கு சென்ற அம்மன் ஊர்வலத்தின் போது பூசாரிகள் சாட்டையால் அடிக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. இந்த மயான கொள்ளை திருவிழாவுக்கு முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் காவேரிப்பட்டினத்திற்கு இயக்கப்பட்டது. கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்களுக்கு விழா குழு சார்பில், வழி நெடுகிலும் அன்னதானம் தண்ணீர் நீர்மோர் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com