சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி: பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி..!

சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி: பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி..!
சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி: பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி..!

பால்கனி இடிந்து விழுந்தபோது தன் உயிரை கொடுத்து பேத்தியை காப்பாற்றியுள்ளார் பாட்டி. சென்னையில் இந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சென்னை முகப்பேர் கி‌ழக்கைச் சேர்ந்தவர்கள் நடராஜன் - லட்சுமி தம்பதி. இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். 2 மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வழக்கம்போல் லட்சுமியும் நடராஜனும் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து வியாபாரத்துக்காக பூ கட்டிக்கொண்டு இருந்தனர். லட்சுமியின் மடியில் அவரது பேத்தி லக்ஷ‌னா அமர்ந்திருந்தார். அப்போது இரண்டாவது தளத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. விபத்தில் இருந்து தனது பேத்தி லக்ஷனாவை காக்க அவரை இறுக்கி அணைத்துக்கொண்டு குனிந்தபடி தம் மீது இடிபாடுகளை வாங்கிக்கொண்டார் லட்சுமி.

சரிந்து விழுந்த இரண்டாவது தளத்தின் பாரத்தை தாங்க முடியாமல் முதல் தளத்தில் இருந்த பால்கனியும் இடிந்து விழுந்தது. அதில் அமர்ந்திருந்த நடராஜன், லட்சுமி மற்றும் அவரது மடியில் இருந்த குழந்தை லக்ஷனா மூவரும் கீழே விழுந்தனர். லட்சுமி தன் மீது இடிபாடு‌ளை தாங்கி கொண்டதால் அவரது பேத்தி லக்ஷனா சிறிய காயங்களுடன் தப்பினார். லட்சுமி மற்றும் நடராஜனுக்கு பலத்த காயம்‌ ஏற்ப‌ட்டது. இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்‌கள் லட்சுமி உயிரிழந்து விட்டதாக கூறினர்.

பால்கனி இடிந்து விழுந்ததில் ‌சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மகேஷ் என்ற இளைஞரும் கா‌யமடைந்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன் தன்னை பார்க்க வருகிறவர்களிடம் லட்சுமி எப்படி இருக்கிறார் ‌என்று கேட்டபடி உள்ளார். மனைவி இறந்துவிட்டதை அவரிடம் உறவினர்கள் யாரும் சொல்லவில்லை. பூக்கட்டிக் கொண்டிருந்த தனது மனைவிக்கு மரணம் வரும் என்று ‌அவர் எதிர்பார்க்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com