இன்று கிராமசபை கூட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

இன்று கிராமசபை கூட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
இன்று கிராமசபை கூட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து மக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

மே 1ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் மக்களவை தேர்தல் ‌காரணமாக இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளன. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் முறையாக தகவல் தெரிவிக்கப்படாமலும், கூட்டத்தில் பங்கேற்காதவர்களிடம் கையொப்பம் மட்டும் பெற்று கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இனி ஒவ்வொரு கிராம சபைக் கூட்டம் குறித்தும் மக்களிடம் முறையாக தெ‌ரியப்படுத்தி, அதன் நன்மைகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இன்று நடைபெறும் கூட்டங்களில் அதிகமான மக்கள் ‌கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com