விழுப்புரம் அரசு மருத்துவருக்கு கொரோனா : கிருஷ்ணகிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு சீல்..!

விழுப்புரம் அரசு மருத்துவருக்கு கொரோனா : கிருஷ்ணகிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு சீல்..!
விழுப்புரம் அரசு மருத்துவருக்கு கொரோனா : கிருஷ்ணகிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு சீல்..!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவருக்கு கொரோனா தொற்று ஊறுதியாகி உள்ளது. இதனால் அவரது மனைவி வசிக்கும் கிருஷ்ணகிரி நகரில் உள்ள கட்டிகானப்பள்ளி கீழ்புதூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஆகிய பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டருக்கு தனிமைபடுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுப்பில் கடந்த 24ம்தேதி வந்த மருத்துவர் நான்கு நாட்கள் வீட்டில் தங்கிருந்து நேற்று தான் பணிக்கு திரும்பினார். இந்நிலையில் கொரோனா உறுதி செய்யபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி கிருஷ்ணகிரியில் மருத்துவராக உள்ளார்.

அவருக்கும் அவரது தந்தை மற்றும் கீழ் வீட்டில் உள்ள 9 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த பகுதிகள் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய சாலை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com