\
சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
Published on

சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில் ஆளுநரை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com