7 பேர் விடுதலையில் ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது - விஜயகாந்த்!
’பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்,முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது’ என்று விஜயகாந்த் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக கூறி ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்தக் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்,முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும், காலதாமதம் செய்யாமல் நல்ல தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்ய வேண்டும்” என்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.