கொரோனா இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி

கொரோனா இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
கொரோனா இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி

கொரோனா இரண்டாம் அலையை தடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல் நாளில ஆளுநர் உரையாற்றினார்.
கொரோனா இரண்டாவது அலையை சமாளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ''மெகா முகாம்கள் நடத்தி அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 86.95% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது தமிழக அரசு. புதிய அரசில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.387 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துக்குள்ளான 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது. மழை வெள்ளத்தால் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதத்தை சந்தித்துள்ளன. தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் அலையை தடுத்த முதல்வருக்கு பாராட்டுக்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் கிடைக்க செய்தார். தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது'' என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com