வேலுநாச்சியாரின் புகழாரம் பாடிய பன்வாரிலால்!

வேலுநாச்சியாரின் புகழாரம் பாடிய பன்வாரிலால்!
வேலுநாச்சியாரின் புகழாரம் பாடிய பன்வாரிலால்!

வாழ்க்கையில் பள்ளிகல்வி என்பது மிக முக்கியமான ஓன்று என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் புதிய கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், வாழ்க்கையில் பள்ளிகல்வி என்பது மிக முக்கியமான ஓன்று எனக்கூறினார். 

மேலும், கல்வியே ஒரு மனிதனின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும், ஆரம்பக்கல்வியை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் கூறினார். அத்துடன் வேலுநாச்சியார், சரோஜினி நாயுடு உள்ளிட்டோரின் வாழ்க்கை குறித்து பன்வாரிலால் புகழாரம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com