“விவசாயிகளுக்கு செவிசாயுங்கள்; விரும்பப்படாத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்”- கமல்

“விவசாயிகளுக்கு செவிசாயுங்கள்; விரும்பப்படாத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்”- கமல்
“விவசாயிகளுக்கு செவிசாயுங்கள்; விரும்பப்படாத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்”- கமல்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக  அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அங்கு நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது சர்வேதேச அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் விரும்பப்படாத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com